வெள்ளி, 20 ஜூலை, 2012

மீண்டும் ஒரு பயணம் வரும்…


மீண்டும் ஒரு பயணம் வரும்

            திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்ட விஜயராகவனுக்கு உயரமான கோவில் கோபுரம் தெரிந்தது. முருகாபயபக்தியோடு கன்னங்களில் போட்டுக் கொண்டான். லெதர்பையை தோளில் போட்டுக் கொண்டு சூட்கேஸை கையில் தூக்கிக் கொண்டான்.
            “இரண்டு ருபா கொடுங்க சார் நான் தூக்கிட்டு வர்ரேன்…”
            அழுக்கடைந்த உடையில் கூலிக்கார பையன்.
            “சூட்கேஸை மட்டும் தூக்கிக்கோ…” நடந்தார்கள். டாக்ஸி ஸ்டாண்டில் பழைய மாடல் அம்பாஸிடர்கள் நிறைய இருந்தன.
            “வாங்கசார்கோவிலுக்குதானே போகணும்?”
            “இல்லேகானத்துக்குப் போகணும்.. எவ்வளவு வேணும்?”
            “நூறு ருபாய் ஆகும் சார்
            காரில் ஏறிக்கொண்டான். பெட்டியைத் தூக்கி வந்த பையனிடம் ஜந்து ருபாயை நீட்டினான்.
            “சில்லரை இல்லே சார்…”
            “வச்சிக்கோ
            கார் நகர்ந்தது. சிறுவனின் கண்களில் பிரமிப்பு. கார் சென்ற பாதை நெடுகிலும் பனை மரங்களும் உடை மரங்களும் தான். அங்கங்கே செழுமையான தென்னந் தோப்புகள். காயாமொழியிலிருந்து வடக்கே வரும்போது சிகப்புக்கலரில் மணல் மேடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எழுந்தும்ää தாழ்ந்தும் மணல் குவியல்கள் அற்புதமாய் இருந்தன. அந்தச் செம்மண் தேரியிலும் பசுமையாய் தழைத்து நின்றன கொல்லாமரங்கள். காற்று வீசும் போது பொடிமணல் காற்றோடு கலந்து மேனியை வருடியது. கானம் பள்ளத்தில் இருந்தது. நெருங்கவும் டிரைவர் கேட்டான்.
            “எந்த தெரு சார்…!
            ‘விசாரிக்கணும்நாராயணசாமி கோவில் பக்கத்துலதான் வீடு…”
            டிரைவர் கும்பலாய் ஓடிவந்த சிறுவர்களைக் கோட்டான்.
            “நாராயணசாமி கோவில் எங்கல இருக்கு?
            “நேரா போட்டு…”