பொன்னுசாமி தனகரன்


பொன்னுசாமி தனகரன் 1957-ல் சுங்கை திங்கி – மலேசியாவில் பிறந்தவர். தகப்பனார் “மலேசியா நெல்லை அண்ணாச்சி” என்று அழைக்கப்படும் பொன்னுசாமி. தாயார் கல்யாணி அம்மாள். சொந்த ஊர் நவ்வலடிää திருநெல்வேலி மாவட்டம். முதுகலை அரசியல் பயின்றவர். மாணவர் பருவத்தில் 1978-ல் தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும் 1980-ல் சென்னை மாநிலக்கல்லூரியிலும் மாணவர்த் தலைவனாகப் பணியாற்றியவர். பெரியாரிய மார்க்ஸிய பொதுவுடைமைக் கட்சி தோழர் ஆனைமுத்து ஐயாவோடு இணைந்து பணியாற்றுபவர். த.வெள்ளையன் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரவையில் மாநிலத்துணைதலைவராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டு வார இதழ்களில் 1987 – 2000 வரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியவர். தூத்துக்குடியில் வலுமூர்த்தி வேலாயுதம் சிட்பண்ட்ஸ்ää கல்யாணி பேரங்காடி எனும் வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்.

தொடர்புக்கு +91 98655 91111

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக