சனி, 29 டிசம்பர், 2012

கற்பூர சத்யம்


                                                   கற்பூர சத்யம் 

அந்த பொறியியல் கல்லூரி வகுப்பறையில் சுப்பிரமணியன் தனியாக அமர்ந்திருந்தான். ஸ்டிரக்சரல் என்ஜினீயரிங் பற்றிய தடித்த புத்தகம் மேஜையில் விரிந்திருந்தது. சின்னச் சின்ன குறிப்புகளை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தான். அந்த வகுப்புக்கு வரவேண்டிய போராசிரியர் விடுமுறை ஆதலால் மாணவர்கள் தேநீர்விடுதி… நூலகம்… அரட்டை…. சிகரெட்ää பீடி என்று வெளியேறி விட்டார்கள். மாணவிகள் ஓய்வறை நோக்கி போய்வி;ட்டார்கள். திடீரென கொலுசு சப்தம். திரும்பினான்  பானுமதி. இரண்டாம் ஆண்டு படிக்கும் அவனுடைய பானுமதி.
“ஏதாவது உதவி வேண்டுமா பானுமதி…”
“பாடத்தில் ஒரு சந்தேகம். நீங்க ரொம்ப அக்கறையா குறிப்பெடுத்துக் கிட்டிருக்கீங்க”
“அதனால பரவாயில்லே… உன் வகுப்பு என்னாச்சு?”
“பிரி அவர்ஸ்தான்”
‘தமிழ்லே சொல்லேன். வகுப்பு கிடையாதுன்னு….
“சொல்ல வரலே”
“சொல்லணும்… நம்ம மொழியில் இல்லாத வளமா…. கருத்தா.. அழகான சொற்களா?”
“எனக்கு முதல்ல இதைச் சொல்லித் தர்றீங்களா?”
அவளது சந்தேகத்தை அரை மணி நேரத்திற்குள் தெளிவுபடுத்தினான். பேராசிரியர் கூட அவ்வளவு பொறுமையாக சொல்லித்தரமாட்டார். பாடம் முடிந்ததும் கேட்டாள்.
“தந்தை பெரியார் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்… ஆனா இவ்வளவு வெறியா இருக்கக் கூடாது”
“எதுக்காக திடீர்னு…”
“கல்லூரிக் கூட்டங்கள்லே அவர் பேரைச் சொல்லி சண்டை இழுக்கற மாதிரி தோணுது…”
“பானுமதி பொறியியல் மாணவியா படிச்சா மட்டும் போதாது… கொஞ்சம் சமூக உணர்வும் வேணும்…. மனுநீதி… வர்ணாசிரமம்… இதையெல்லாம் நீ ஒத்துக்கறியா?”
“அதுக்குள்ளே நான் வரலேப்பா”
“வரவேண்டாம்… திருநீறு ப10சிக்க… குங்குமம் வச்சுக்க… கோவில்தோறும் போயி கன்னத்துல போட்டுக்க…”
அவள் சிரித்தாள்.
“பெரியார் எதையும் அவருக்காகக் கேட்கலே. அடிமட்டத்து மக்களுக்காகத்தான் கேட்டாரு. கண்ணு தெரியாம அலையாதீங்கடான்னு தமிழர்களை எச்சரிக்கை பண்ணினாரு.. கூனிக்குறுகி ஏண்டா கும்பிடறீங்க… தலைநிமிர்ந்து நில்லுங்கன்னு சொன்னாரு. நாலு வர்ணமும் பொய்… வேதங்கள் பொய்.. உனக்குன்னு ஒரு வரலாறு இருக்குன்னு ஆதாரங்களோட சொன்னாரு. அவரளவுக்கு தமிழ் மக்களைப் பற்றி கவலைப்பட்டவங்க வேற யாரும் இருக்கமுடியாது” துடிக்கும் அவனது அதரங்களையும சிவந்த விழிகளையும பானுமதி தைரியமாக ஏறிட்டாள்.
“அதெல்லாம் இருக்கட்டும்… இந்த வருஷம் முடிய இன்னும் நாலுமாசம்தான் இருக்கு. நீங்க பட்டம் வாங்கிட்டு போயிருவீங்க. எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க…?”
“நீ படிச்சி முடி… அடுத்த நாளே எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிர்றேன்…”
“எனக்கு பயமா இருக்கு. இந்த சாதியத் தளைகள் என்னென்ன பிரச்சினைகளை உண்டுபண்ணுமோ”
“எங்கப்பாவும் நம்ம காதலை கண்டிப்பா ஏத்துக்கமாட்டார். ஆனா என்னால உன்னை பிரிஞ்சி இருக்க முடியாது”
“என்னைக் கைவிட்டிறாதீங்க.. அப்புறம் நான் செத்துப் போயிருவேன்”
“என் மேல சந்தேகம் இருந்தா தாராளமா செத்துப்போ”
“இந்த கோபமும் பிடிவாதமும் தான் உன்னை நெருங்கச் செய்ததடா... என் செல்லப் பையா”
“முதல்ல இடத்தை காலி பண்ணு”
அவன் கன்னத்தில் மெல்லத் தட்டிவிட்டு அவள் வகுப்பறையை விட்டு வெளியில் வந்தாள்.
வருடங்கள் உருண்டன. சுப்பிரமணியனுக்கு அரசுத்துறையில் சென்னையில் வேலை கிடைத்தது. பானுமதி படித்துவிட்டு வேலை தேடினாள். வேலை கிடைத்தபாடில்லை. தகப்பனார் அவளுக்கு வரன் பார்க்கத் துவங்கினார். இன்டர்விய10 அது இது என்று பொய் சொல்லி சென்னை வந்தவள் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கண்ணீர் சிந்தினாள்.
“உன் அப்பாவுக்கு தபால் எழுதிப்போடு. என்னுடனே இருந்து கொள்” என்றான் அலட்டிக்கொள்ளாமல். அவளுக்கும் அது சரி என்று பட்டது. விடிந்தால் பதிவுத் திருமணம்.
“தாலி அவசியமில்லைää அது ஒரு அடிமைச் சின்னம்” என்றான் சுப்பிரமணியன்.
‘எனக்கு அது வேண்டும் . உங்கள் கொள்கைகளை நீங்களே வைத்துக் கௌ;ளுங்கள்”
அவளது முகக் கோணலையும் சிணுங்கலையும் ரசித்தான்.
“உன்னோட உணர்வுக்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பேன்.” தாலி கட்டினான். கோவிலுக்கு போக வேண்டும் என்றாள். வடபழனி அழைத்துச் சென்றான். அவளை சன்னதிக்குள் அனுப்பி வைத்துவிட்டு வெளிப்பிரகாரத்திலேயே நின்று கொணடான். அவள் ப10வும் குங்குமமுமாய் வந்ததை மௌனச் சிரிப்போடு ஏறிட்டான்.
செய்தி தெரிந்து அவளது பெற்றோர்கள் வந்தார்கள். ரௌத்திரம் ஆனார்கள்.
“இதுக்கா படிக்க வச்சோம்?”
பானுமதி அழுதாள்
“வீட்டு வாசப்படி ஏறக்கூடாதுடி…” அப்பா கத்திவிட்டு அம்மாவையும் இழுத்துக் கொண்டு போனார்.
சுப்பிரமணியன் பானுமதியை அழைத்துக் கொண்டு கவுண்டம்பாளையம் வந்தான்.
“நீ என் பிள்ளையாடா.. குலத் துரோகி…” கூச்சலிட்டவர் வாசலில் கற்ப10ரம் பொறுத்தி சத்தியம் செய்து அணைத்தார்.
“நீ எனக்குப் பிள்ளையும் இல்லை… நான் உனக்கு அப்பனும் இல்லைää உன்னை தலைமுழுகிட்டேன்…”
சுப்பிரமணியன் தந்தையை… அவரது கதறலை.. அனுதாபத்துடன் பார்த்தான். கடலைக்காய் போட்டு வியர்வை சிந்தி அவர் தந்த கல்வி.. பிள்ளை சொல் கேளாமல் குலம் அறியாமல் எவளோ ஒருத்தியை இழுத்து வந்து நிற்கிறதே என்று வெடித்த வேதனை.. அப்பா மேல் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. மனைவியோடு திரும்பி நடந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அவனது தாயும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மகனைக் கையைக் காட்டி அழுதாள். அவள் கூக்குரல் அங்கு எடுபடவில்லை.
ஜந்து வருடங்களில் பானுமதி மணியான இரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஆனாள். மூத்தவன் ராமசாமி. இளையவன் குமாரசாமி. ஒருநாள் சுப்பிரமணியன் மனைவியிடம் சொன்னான்.
“என்ற அய்யனைப் பார்க்கணும் போல இருக்கு”
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
கவுண்டம்பாளையம் அவர்கள் சென்றபோது நல்ல மழை பெய்திருந்தது. கடலைக்காடடில் வேலை இருக்காது. அப்பா வீட்டில்தான் இருக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் வெளியிலேயே நின்று கொண்டார்கள். சுப்பிரமணியன் பிள்ளைகளைப் பார்த்து சொன்னான்.
“டேய் இதுதாண்டா உங்க தாத்தன் வீடு…
ராமசாமியும் குமாரசாமியும் அந்த பண்ணை வீட்டிற்குள் குடுகுடுவென ஓடினார்கள். கூடத்தில்  தாத்தா ஓய்வு நாற்காலியில் படுத்திருந்தார். பாட்டி வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.
“யாரு கண்ணு நீங்க…?”
“என் பேரு ராமசாமி… அவன் பேரு குமாரசாமி…”
அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பையன் அவர் பெயரையும் அவர் தந்தையின் பெயரையும் சொல்கிறான்.
“யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க…”
“என்ற அய்யன் பேரு சுப்பிரமணியன்… அதான் உன்ற பிள்ளை…”
தாத்தா சேரில் இருந்து எழுந்து அவர்கள் இருவரையும் அப்படியே அள்ளிக்கொண்டார்.
“என்ற பேரப்பிள்ளைங்க…. என்ற பேரப்பிள்ளைங்க… “குதிக்காத குறைதான். வாசலுக்கு வந்தவர் தயங்கி நின்றவர்களை ஏறிட்டார்.
“ஏடி… என்ற பிள்ளையை உள்ளார வரச்சொல்லுடி.. என் மருமகளையும்தான்…”
சுப்பிரமணியன் பானுமதியோடு வீட்டினுள் வந்தான். பேரப்பிள்ளைகள் தாத்தாமார்களின் இதயக் கோட்டையை எவ்வளவு எளிதில் கைப்பற்றி விடுகிறார்கள்… அவனது மனது வியப்பின் எல்லைக்கு சென்றது.
தேவி
12.02.2003

பேசாத இதழ்கள்


                                        பேசாத இதழ்கள்
மாலையில் பெண் பார்க்கச் செல்ல வேண்டும். அலுவலகத்தில் ராகவன் இனம்புரியாத உற்சாகத்தில் இருந்தான். உதவியாளர்களிடம் கலகலப்பாக பேசினான். இந்த இருபத்தேழு வயதில் தன்னோடு கைகோர்க்க வரும் அந்த வசந்தத்தை நினைக்க நினைக்க இனித்தது.
தன்னை முதல் முதலில் பார்க்கும் போது அவளது முகபாவங்கள் எப்படியெல்லாம் மாறும்…? அவளது பவழ விழிகள் என்ன கதையெல்லாம் பேசும்…? நினைவு நித்யாவை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. ‘மைடியர் நித்யா.. நீ எப்படி இருப்பாய்… நீயும் என்னைப் போல கற்பனை உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பாய்… இனிய கனவுகளைச் சுமந்து கொண்டிருப்பாய்…!’
வாலிபம் அரும்பி இத்தனை வருடங்களில் ராகவனுக்கு பெண்களிடம் பழக்கம் வைத்துக் கொள்வது உடல் நடுக்கம் பிடித்த விஷயம். குடியிருந்த தெருவில்ää அலுவலகத்தில்ää பொது இடங்களில் பல ஜோடி கயல் மீன் கண்கள் அவனிடம் கதை பேசியிருக்கின்றன. அப்போதெல்லாம் உடம்பு சிலிர்க்கும். இளமையும்ää துடிப்பும் மிக்க இளைஞனான அவன் பெண்களைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. ஆனால் அவனிடம் கண்ணியமும்ää கட்டுப்பாடும் இருந்தது.
அவனுக்குத் திருமணப் பேச்சு துவங்கியதும் வந்திருக்கும் முதல் வரனே நித்யாதான். நித்யாவின் குடும்பம் பற்றி அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த வீட்டுப் பெண் வருவதற்கு கொடுத்து வைத்திருக்க வெண்டும் என்று அபிப்ராயப்பட்டாள். நித்யாவுக்கு பள்ளியில் ஆசிரியை வேலை. நல்ல குணம் என்று கேள்வி.
அவள் எப்படி இருப்பாள் என்று யாரும் சொல்லவில்லை. ஜாதகம் பொருந்தி வந்தது. பெண்ணும் பிடித்திருக்க வேண்டும். ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது அழகாக இருக்க வேண்டும். இன்னும் சில மணி நேரங்கள்… ராகவன் காத்திருக்க சங்கடப்பட்டான்.
பள்ளியில் நித்யாவுக்கு காலையில் இருந்தே படபடப்பாய் இருந்தது. இதுவரை தன்னைப் பெண் பார்த்து விட்டுச் சென்றவர்கள் பத்து பேர் இருக்கும். ஒருவருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. “சகுனம் சரியில்லை… தெய்வ சம்மதம் இல்லை” என்று சுலபமாய்த் தட்டிக் கழித்து விட்டார்கள். தான் சற்று ஒடிசலாய் இருப்பதுதான் அவர்கள் நிராகரிப்புக்குக் காரணம் என்பது நன்றாகப் புரிந்தது.
வந்தவர்கள் ஒவ்வொருவரும் மறுத்துவிட்டு சென்றதால் சற்றேமெலிந்த உடம்பு மேலும் வாடியது. தான் கரை சேருவேனோ மாட்டேனோ என்ற பயத்தில் மனதும் உடலும் ஒரு சேர சோர்ந்தது.
இன்று வர இருக்கும் வரனுக்கும் தன்னைப் பிடிக்கிறதோ என்னவோää பெண் பார்க்க வருபவர்கள் டாக்ஸியில் அமர்க்களமாய் வருவதும் பதில் சொல்லாமல் சென்று விடுவதும் அவர்களைப் பொறுத்த வரை சாதாரணமானது தான். ஆனால் தெரு முழுக்க பெண்கள் இதை ரகசியமாகப் பேசி முணு முணுக்கும் போது மனது ரணமாகிப் போகும். திருமணமே வேண்டாம் என்று கூட சொல்லிப் பார்த்தாயிற்று. பெற்றோர் கேட்பதாக இல்லை.
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த எண்ணம் வந்தது. இன்று வரவிருக்கும் ராகவன் கம்பெனி விலாசம் தெரியும். அவனை நேரில் சந்தித்து விட்டால் என்ன… சந்தித்து… தன்னைப் பெண் பார்க்க வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் குறைந்தபட்சம் தெருவாசிகளின் முணுமுணுப்பையாவது தவிர்த்து விடலாமே! எதற்கு தேவையில்லாத வேதனையும் அவமானமும்? தான் திட்டமிட்டது சரியென்றே தோன்றியது.
நித்யாää ராகவனின் அலுவலகத்தை அடைந்தபோது மாலை மூன்று மணி. அவனது பிரத்யேக அறை ‘ஏசி’ செய்யப்பட்டிருந்தது. பிய10ன் நீட்டிய வெள்ளைக் காகிதத்தில் தன் பெயர் விலாசத்தை எழுதினாள். பிய10ன் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ராகவனே எழுந்து வந்து அவளை வரவேற்றான்.
நாற்காலியில் அவளை அமருமாறு கேட்டுக்கொண்டு தானும் அமர்ந்து அவளையே மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். உடல் மெலிந்திருந்தாலும் அவளது முகத்தில் லட்சுமி கடாட்சம் இருந்தது. தலையில் சூடியிருந்த மல்லிகைச்சரம் தோளுக்கு மேலே குவிந்து அந்த முகமலருக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. கண்களும்ää மூக்கும் சர்வ லட்சணமாய் இருந்தது. அவன் அவளை ஆராய்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அவளது விழிகளும் படபடப்பாய் அவனை எடை போட்டுக் கொண்டிருந்தன.
மாநிறத்தில் நல்ல உயரமாய் கட்டுக்கோப்பான உடல்வாகுடன் கம்பீரமாய் இருந்தான். இவனுக்கு நிச்சயமாய்த் தன்னைப் பிடிக்கப் போவதில்லை… வந்தது நல்லதாய்ப் போயிற்று. அவனது கம்பீரத்துக்கு முன் நாமெங்கே..?
ராகவனுக்கு அவள் மீது பரிவே தோன்றியது. நாற்காலியில் அமர்ந்திருக்கவே அவள் சங்கடப்படுவது போல் தோன்றியது நேரடியாக வந்திருக்கிறாள். எதற்காக இருக்கும்? அவனை அதிக நேரம் யோசிக்கவிடாமல் அவள் பேச்சைத் துவங்கினாள்.
“இன்றைக்குப் பார்க்கப் போற பெண் இவ்வளவு மோசமா இருப்பாண்ணு நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க… என்ன செய்யறது…? மனசு நல்லா இருந்தாதானே உடம்பு நல்லா இருக்கும். என்னை இதுவரைக்கும் பத்து பேரு வந்து பாhத்திட்டு போயிட்டாங்க சார்ää ஒருத்தருக்குமே பிடிக்கலை.”
“அதன்பின் வார்த்தைகள் வர நேரம் பிடித்தது. உதடுகள் துடித்தது. கண்கள் நீர் கோர்த்தது. சிரமத்துடன் பேசினாள்.
“நான் அழகில்லே போலிருக்கு…. வேண்டானுட்டாங்க… ஆண்கள் மனசுல சினிமா ஸ்டார் மாதிரி மனைவி அமையணும்னு எண்ணம் வந்தாச்சு. யாரையும் தவறா சொல்லலை சார்… ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு மாதிரி கனவு இருக்கும்… அதுக்காக அவங்களை குற்றம் சொல்ல முடியுமா? இப்ப நான் வந்தது… நீங்க என்னை நிராகரிக்கக் கூடாதுன்னு கேட்டுக்கறதுக்கு இல்லே சார்… நீங்க வர வேண்டாம்னு சொல்றதுக்காகத்தான்.
பத்து பேர் பார்த்திட்டுப் போயாச்சு… ஒவ்வொரு தடவையும் நெருப்பை அள்ளி தலையிலே போட்டுக்கற மாதிரி இருக்கு. சும்மா சும்மா எதுக்கு சார் வந்து பார்த்திட்டு ஏமாந்து போகணும்…?
முந்தானையால் கண்களைத் துடைத்தபடி மேலும் பேசினாள்.
“என்னோட வலி எனக்குத் தான் சார் தெரியும். அதனால வீட்டுல இனி எந்த வரனைப் பார்த்தாலும் நேர்ல போயி அவங்களை வர வேண்டாம்னு கேட்டுக்கப் போறேன். எனக்கு எப்ப விடியுதோ அப்ப விடியட்டும். இல்லேன்னா விடியாமலே போகட்டும்.”
அவள் மீண்டும் அழுதாள். அவசர அவசரமாக முகத்தைத் துடைத்தாள். அந்நிய ஆடவனின் முன்னால் உணர்ச்சி வசப்பட்டு விட்டோமே என்று இருந்தது அவளுக்கு… “உங்க நேரத்தை வீணாக்கி தொல்லை கொடுத்திட்டேன்… மன்னிச்சிருங்;க சார்…..!”
“ராகவன் அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு வந்தான். மீண்டும் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தினான்.
மாலையில் நித்யா வெகு சாதாரணமாக வீட்டுக்குப் புறப்பட்டாள். பெண் பார்க்கும் படலம் இன்று கிடையாது நிம்மதி. வீட்டை அடைந்ததும் அம்மா கத்தினாள்.
“ஏண்டி அறிவில்லே…? மணி ஜந்தைத் தாண்டுது… அவங்க எப்ப வேண்ணாலும் வந்திரலாம். இவ்வளவு பொறுப்பில்லாம தாராளமா வந்திருக்கே. முகத்தைக் கழுவி பட்டுப் புடவையை உடுத்தி தயாரா இருடி… உன்னையும் பெத்தேன் பாரு….”
நித்யா சிரித்துக் கொண்டாள். பாவம் அம்மா. இன்று அவர்கள் வரப்போவதில்லை என்பது அவளுக்குத் தெரியாது. ஏமாந்து போவாள். இரவு எட்டு மணி வரைக்கும் அம்மாவும் அப்பாவும் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போனார்கள். நித்யா ரசம் ஊற்றி கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டாள். ராகவனின் நினைவு வந்தது. எவ்வளவு கம்பீரமான கனிவான தோற்றம். அவனைக் கணவனாக வாய்த்தவள் கொடுத்து வைத்தவள்தான்.
இரண்டு நாளில் நித்யாவின் தகப்பனாருக்கு அந்தக் கடிதம் வந்தது. ராகவன்தான் எழுதியிருந்தான். பெண் பார்க்க வரவிருந்த நாளில் எதிர்பாராமல் நித்யாவைச் சந்தித்ததையும் அவளை அங்கேயே பிடித்துப் போயிற்று என்றும் எழுதியிருந்தான். முகூர்த்த தேதிகளை பேசி ஒழுங்கு செய்ய தனது தந்தை ஓரிரு நாளில் அங்கு வர இருப்பதையும் குறிப்பிட்டிருந்தான்.
நித்யாவின் தகப்பனாருக்கு நெஞ்சு விம்மியது. கடிதத்தை மனைவியிடம் படிக்கவே அவரால் முடியவில்லை. விஷயம் தெரிந்ததும் அவரது மனைவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். “குழந்தைக்கு உடனே சொல்லி விட்டு வந்திருங்கோ…!” நிலைகொள்ளாமல் கணவனை விரட்டினாள். அவர் நித்யாவின் பள்ளிக்கு ஆட்டோவில் விரைந்தார்.
கடிதத்தைப் படித்ததும் நித்யா கேவி அழுதபடி தந்தையை அப்படியே கட்டிக் கொணடாள். இது எப்படி சாத்தியம் என்று அவளுக்கு விளங்கவே இல்லை.
‘ராகவன் எனது வருங்காலக் கணவனா…? தாயே… ராஜேஸ்வரி… அது நிஜம் தானா?’ குலுங்கிக் குலுங்கி அழுத மகளை தகப்பனார் ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தார்.
ராகவன்  நித்யா திருமணம் தடபுடலாக நடந்து முடிந்திருந்தது. நித்யாவின் தந்தை பணத்தை தண்ணீர்ராய் செலவு செய்திருந்தார். வரதட்சணை என்று மாப்பிள்ளை வீட்டார் வாய் திறக்காதது அவருக்கு பிரமிப்பாக இருந்தது. தன்னால் எவ்வளவு முடியுமோ அத்தனையும் மகளுக்கு சிறப்பாக செய்திருந்தார். தெரு முழுக்க நித்யாவுக்க வாய்த்த அதிர்ஷ்டம் குறித்தே பேச்சாக இருந்தது. “நித்யாக்கா மாப்பிள்ளை ஜோரா இருக்கார்டி…” தெருப்பெண்கள் அவள் காதுபடவே பேசினார்கள்.
முதலிரவு அறை. கையில் பால் டம்ளருடனும் கண்களில் கண்ணீருடனும் ராகவனை நெருங்கிய நித்யா டம்ளரை கீழே வைத்து விட்டு அவனை வணங்கää மென்மையாக அவளைப் பற்றித் தூக்கி மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“எதுக்கு அழணும்…”
“எனக்காக இரக்கப்பட்டுத் தானே கட்டிக்கிட்டீங்க…. இதப்பாருங்க… நான் தெய்வத்தை இதுவரை நேர்ல பார்தததில்லே. இப்ப நேர்லேயே பார்க்கிறேன்.” கண்ணீரால் அவன் மார்வை நனைத்தாள். அவளை ப10ப்போலதழுவிய ராகவனின் மனது நிரம்பிப் போய் இருந்தது. கல்யாண வயது ஏற ஏற பெண்களின் உடம்பும் மனதும் பலகீனப்பட்டுவிடும் என்பது எவ்வளவு அனுதாபத்திற்குரியாது. நித்யா இன்னும் சில நாட்களில் ப10ரித்துப் போய்விடுவாள்.
நம்பிக்கை இழந்திருந்த அவளை மணந்தது பெருமையாகவும்ää கவுரவமாகவும் இருந்தது.
நித்யா மீண்டும் ஏதோ சொல்ல உதடுகளைப் பிரித்தபோது ராகவனின் இதழ்கள் அவைகளைப் பேசவிடாமல் கவ்விக் கொண்டன.

தேவி
15.05.91

கற்பூர சத்யம்


                      கற்பூர சத்யம்

அந்த பொறியியல் கல்லூரி வகுப்பறையில் சுப்பிரமணியன் தனியாக அமர்ந்திருந்தான். ஸ்டிரக்சரல் என்ஜினீயரிங் பற்றிய தடித்த புத்தகம் மேஜையில் விரிந்திருந்தது. சின்னச் சின்ன குறிப்புகளை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தான். அந்த வகுப்புக்கு வரவேண்டிய போராசிரியர் விடுமுறை ஆதலால் மாணவர்கள் தேநீர்விடுதி… நூலகம்… அரட்டை…. சிகரெட்ää பீடி என்று வெளியேறி விட்டார்கள். மாணவிகள் ஓய்வறை நோக்கி போய்வி;ட்டார்கள். திடீரென கொலுசு சப்தம். திரும்பினான்  பானுமதி. இரண்டாம் ஆண்டு படிக்கும் அவனுடைய பானுமதி.
“ஏதாவது உதவி வேண்டுமா பானுமதி…”
“பாடத்தில் ஒரு சந்தேகம். நீங்க ரொம்ப அக்கறையா குறிப்பெடுத்துக் கிட்டிருக்கீங்க”
“அதனால பரவாயில்லே… உன் வகுப்பு என்னாச்சு?”
“பிரி அவர்ஸ்தான்”
‘தமிழ்லே சொல்லேன். வகுப்பு கிடையாதுன்னு….
“சொல்ல வரலே”
“சொல்லணும்… நம்ம மொழியில் இல்லாத வளமா…. கருத்தா.. அழகான சொற்களா?”
“எனக்கு முதல்ல இதைச் சொல்லித் தர்றீங்களா?”
அவளது சந்தேகத்தை அரை மணி நேரத்திற்குள் தெளிவுபடுத்தினான். பேராசிரியர் கூட அவ்வளவு பொறுமையாக சொல்லித்தரமாட்டார். பாடம் முடிந்ததும் கேட்டாள்.
“தந்தை பெரியார் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்… ஆனா இவ்வளவு வெறியா இருக்கக் கூடாது”
“எதுக்காக திடீர்னு…”
“கல்லூரிக் கூட்டங்கள்லே அவர் பேரைச் சொல்லி சண்டை இழுக்கற மாதிரி தோணுது…”
“பானுமதி பொறியியல் மாணவியா படிச்சா மட்டும் போதாது… கொஞ்சம் சமூக உணர்வும் வேணும்…. மனுநீதி… வர்ணாசிரமம்… இதையெல்லாம் நீ ஒத்துக்கறியா?”
“அதுக்குள்ளே நான் வரலேப்பா”
“வரவேண்டாம்… திருநீறு ப10சிக்க… குங்குமம் வச்சுக்க… கோவில்தோறும் போயி கன்னத்துல போட்டுக்க…”
அவள் சிரித்தாள்.
“பெரியார் எதையும் அவருக்காகக் கேட்கலே. அடிமட்டத்து மக்களுக்காகத்தான் கேட்டாரு. கண்ணு தெரியாம அலையாதீங்கடான்னு தமிழர்களை எச்சரிக்கை பண்ணினாரு.. கூனிக்குறுகி ஏண்டா கும்பிடறீங்க… தலைநிமிர்ந்து நில்லுங்கன்னு சொன்னாரு. நாலு வர்ணமும் பொய்… வேதங்கள் பொய்.. உனக்குன்னு ஒரு வரலாறு இருக்குன்னு ஆதாரங்களோட சொன்னாரு. அவரளவுக்கு தமிழ் மக்களைப் பற்றி கவலைப்பட்டவங்க வேற யாரும் இருக்கமுடியாது” துடிக்கும் அவனது அதரங்களையும சிவந்த விழிகளையும பானுமதி தைரியமாக ஏறிட்டாள்.
“அதெல்லாம் இருக்கட்டும்… இந்த வருஷம் முடிய இன்னும் நாலுமாசம்தான் இருக்கு. நீங்க பட்டம் வாங்கிட்டு போயிருவீங்க. எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க…?”
“நீ படிச்சி முடி… அடுத்த நாளே எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிர்றேன்…”
“எனக்கு பயமா இருக்கு. இந்த சாதியத் தளைகள் என்னென்ன பிரச்சினைகளை உண்டுபண்ணுமோ”
“எங்கப்பாவும் நம்ம காதலை கண்டிப்பா ஏத்துக்கமாட்டார். ஆனா என்னால உன்னை பிரிஞ்சி இருக்க முடியாது”
“என்னைக் கைவிட்டிறாதீங்க.. அப்புறம் நான் செத்துப் போயிருவேன்”
“என் மேல சந்தேகம் இருந்தா தாராளமா செத்துப்போ”
“இந்த கோபமும் பிடிவாதமும் தான் உன்னை நெருங்கச் செய்ததடா... என் செல்லப் பையா”
“முதல்ல இடத்தை காலி பண்ணு”
அவன் கன்னத்தில் மெல்லத் தட்டிவிட்டு அவள் வகுப்பறையை விட்டு வெளியில் வந்தாள்.
வருடங்கள் உருண்டன. சுப்பிரமணியனுக்கு அரசுத்துறையில் சென்னையில் வேலை கிடைத்தது. பானுமதி படித்துவிட்டு வேலை தேடினாள். வேலை கிடைத்தபாடில்லை. தகப்பனார் அவளுக்கு வரன் பார்க்கத் துவங்கினார். இன்டர்விய10 அது இது என்று பொய் சொல்லி சென்னை வந்தவள் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கண்ணீர் சிந்தினாள்.
“உன் அப்பாவுக்கு தபால் எழுதிப்போடு. என்னுடனே இருந்து கொள்” என்றான் அலட்டிக்கொள்ளாமல். அவளுக்கும் அது சரி என்று பட்டது. விடிந்தால் பதிவுத் திருமணம்.
“தாலி அவசியமில்லைää அது ஒரு அடிமைச் சின்னம்” என்றான் சுப்பிரமணியன்.
‘எனக்கு அது வேண்டும் . உங்கள் கொள்கைகளை நீங்களே வைத்துக் கௌ;ளுங்கள்”
அவளது முகக் கோணலையும் சிணுங்கலையும் ரசித்தான்.
“உன்னோட உணர்வுக்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பேன்.” தாலி கட்டினான். கோவிலுக்கு போக வேண்டும் என்றாள். வடபழனி அழைத்துச் சென்றான். அவளை சன்னதிக்குள் அனுப்பி வைத்துவிட்டு வெளிப்பிரகாரத்திலேயே நின்று கொணடான். அவள் ப10வும் குங்குமமுமாய் வந்ததை மௌனச் சிரிப்போடு ஏறிட்டான்.
செய்தி தெரிந்து அவளது பெற்றோர்கள் வந்தார்கள். ரௌத்திரம் ஆனார்கள்.
“இதுக்கா படிக்க வச்சோம்?”
பானுமதி அழுதாள்
“வீட்டு வாசப்படி ஏறக்கூடாதுடி…” அப்பா கத்திவிட்டு அம்மாவையும் இழுத்துக் கொண்டு போனார்.
சுப்பிரமணியன் பானுமதியை அழைத்துக் கொண்டு கவுண்டம்பாளையம் வந்தான்.
“நீ என் பிள்ளையாடா.. குலத் துரோகி…” கூச்சலிட்டவர் வாசலில் கற்ப10ரம் பொறுத்தி சத்தியம் செய்து அணைத்தார்.
“நீ எனக்குப் பிள்ளையும் இல்லை… நான் உனக்கு அப்பனும் இல்லைää உன்னை தலைமுழுகிட்டேன்…”
சுப்பிரமணியன் தந்தையை… அவரது கதறலை.. அனுதாபத்துடன் பார்த்தான். கடலைக்காய் போட்டு வியர்வை சிந்தி அவர் தந்த கல்வி.. பிள்ளை சொல் கேளாமல் குலம் அறியாமல் எவளோ ஒருத்தியை இழுத்து வந்து நிற்கிறதே என்று வெடித்த வேதனை.. அப்பா மேல் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. மனைவியோடு திரும்பி நடந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அவனது தாயும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மகனைக் கையைக் காட்டி அழுதாள். அவள் கூக்குரல் அங்கு எடுபடவில்லை.
ஜந்து வருடங்களில் பானுமதி மணியான இரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஆனாள். மூத்தவன் ராமசாமி. இளையவன் குமாரசாமி. ஒருநாள் சுப்பிரமணியன் மனைவியிடம் சொன்னான்.
“என்ற அய்யனைப் பார்க்கணும் போல இருக்கு”
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
கவுண்டம்பாளையம் அவர்கள் சென்றபோது நல்ல மழை பெய்திருந்தது. கடலைக்காடடில் வேலை இருக்காது. அப்பா வீட்டில்தான் இருக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் வெளியிலேயே நின்று கொண்டார்கள். சுப்பிரமணியன் பிள்ளைகளைப் பார்த்து சொன்னான்.
“டேய் இதுதாண்டா உங்க தாத்தன் வீடு…
ராமசாமியும் குமாரசாமியும் அந்த பண்ணை வீட்டிற்குள் குடுகுடுவென ஓடினார்கள். கூடத்தில்  தாத்தா ஓய்வு நாற்காலியில் படுத்திருந்தார். பாட்டி வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.
“யாரு கண்ணு நீங்க…?”
“என் பேரு ராமசாமி… அவன் பேரு குமாரசாமி…”
அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பையன் அவர் பெயரையும் அவர் தந்தையின் பெயரையும் சொல்கிறான்.
“யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க…”
“என்ற அய்யன் பேரு சுப்பிரமணியன்… அதான் உன்ற பிள்ளை…”
தாத்தா சேரில் இருந்து எழுந்து அவர்கள் இருவரையும் அப்படியே அள்ளிக்கொண்டார்.
“என்ற பேரப்பிள்ளைங்க…. என்ற பேரப்பிள்ளைங்க… “குதிக்காத குறைதான். வாசலுக்கு வந்தவர் தயங்கி நின்றவர்களை ஏறிட்டார்.
“ஏடி… என்ற பிள்ளையை உள்ளார வரச்சொல்லுடி.. என் மருமகளையும்தான்…”
சுப்பிரமணியன் பானுமதியோடு வீட்டினுள் வந்தான். பேரப்பிள்ளைகள் தாத்தாமார்களின் இதயக் கோட்டையை எவ்வளவு எளிதில் கைப்பற்றி விடுகிறார்கள்… அவனது மனது வியப்பின் எல்லைக்கு சென்றது.
தேவி
12.02.2003

வெள்ளி, 28 டிசம்பர், 2012

அம்மா எங்கும் போகமாட்டாள்





                                    அம்மா எங்கும் போகமாட்டாள்

     கதிர்வேலு வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பனிரெண்டு. மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். கைகால் அலம்பியதும் தட்டில் சோற்றைப் போட்டாள் லெட்சுமி. சாப்பிட அமர்ந்தவர் சோற்றை விரல்களால் அழைந்தபடி இருந்தாரே தவிர ஒரு கவளம் கூட வாய்க்குள் செல்லவில்லை.
      லெட்சுமிக்கு அவரது வேதனை புரிந்தது. குறுக்கே பேச வாய் வரவில்லை. வயதுக்கு வந்த மகள்கள் இருவரும் தாயின் பக்கத்தில் கவலையோடு நின்றிருப்பதை ஏறிட்டுப் பார்த்தார். யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
      “சாப்பாடு வேண்டாம்” எழுந்துகொண்டார்.
      சோற்றுப் பானையில் சோறு அப்படியே இருந்தது. அவருக்கு மட்டுமல்லää அவர்களுக்கும் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆளுக்கொரு மூலையாய் படுத்துக் கொண்டார்கள்.
      கதிர்வேலு வராந்தாவில் நார்க் கட்டிலில் அமர்ந்து மவுனமாக சுருட்டை இழுத்;துக் கொண்டிருந்தார். பக்கத்து கட்டில் வெறுமையாக இருந்தது. தலையணை மீது போர்வை மடித்து வைக்கப்பட்டிருந்தது. இத்தனை நாளும் அந்தக் கட்டிலில் அமர்ந்துää மகனோடு பேசி மகிழ்ந்து மகன் பக்கத்திலேயே அமைதியாக நித்திரை கொள்ளும் வயது முதிர்ந்த தாயார் இன்று இல்லை. காலையில் அவருக்கும் அவளுக்கும் நடந்த கடுமையான வாக்கு வாதத்தால் வீட்டைவிட்டு வெளியேறி இளைய மகன் இருக்கும் திருவைகுண்டத்துக்குப் போய்விட்டாள். அவள் இல்லாமல் வீடு வெறிச்சோடிக் கிடப்பதாகத் தோன்றியது.

புதன், 26 டிசம்பர், 2012

கங்கை வற்றுவதில்லை






                                        கங்கை வற்றுவதில்லை

      திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் பிரமாண்டமான வெண்கல மணிகளின் நாதம் அந்த காலை நேரத்தில் கணீர் கணீர் என எதிரொலித்தது. அண்ணாமலையாரின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நின்றிருந்த சுயம்பு நாடாரின் உடம்பு சிலிர்த்தது. விரைவாகப் பிரகாரம் சுற்றினார். மலையும் அதன் ரம்மியமும்; மனதை அள்ளியது.
      மகாதேவன் ஸ்டோர் பாத்திரக்கடை தரை தெளித்து சுத்தமாகியது. பையன்கள் சுறுசுறுப்பாக பாத்திரங்களை அடுக்கினார்கள். தூசி தட்டினார்கள் தொங்க விட்டார்கள். சுயம்பு நாடார் ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு பட்டரையில் அமர்ந்தார். கடையில் கூட்டம் சேர்ந்திருந்தது.
“என்னப்பா சுயம்பு நாடார்…. நல்லாயிருக்கியா… அண்ணாமலையான் உன்னைக் கைவிடமாட்டான்பா…
சுயம்பு நாடார் அந்த எழுபது வயது மூதாட்டியின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார். மனம் விம்மியது.
“அண்ணாச்சி பழையபடி பட்டரையில் இப்படி உட்கார்ந்திருக்கிறது மனசுக்கு சந்தோஷமாயிருக்கு.”
இன்னொரு பெண்.
“உங்களுக்கு நெஞ்சுவலி கூட இருந்துதாமே… எவ்வளவு பெரிய விஷயம். தைரியமாக தாங்கிக்கிட்டீங்கää இனிமே எதுவும் உங்களை அசைக்க முடியாது அண்ணாச்சி.” கல்லூரி மாணவன் போலிருந்தவன் குரலில் மலர்ச்சி.
சாதாரண விஷயமா அது. சன்னதி கடைவீதி தீப்பிடித்து அந்த மகா மண்டபம் எரிந்து சரிந்தபோது அவரது மகாதேவன் ஸ்டோரும் பல லட்ச ரூபாய் சரக்குகளும்ää தீயின் கொடிய நாக்குகளுக்கு இரையாகிப் போயின. கனவிலும் நினையாத ஒன்று சம்பவித்து விட்டது. கடைக்கு இன்ஸ{ரன்ஸோ பேங்கில் வலுவான சேமிப்புகளோ இல்லாத நிலை. வியாபாரத்தை மனித நேயத்தோடு செய்தவர் அவர். பணம் பண்ணத் தெரியாதவர்.
எவர் இல்லையென்று வந்து நின்றாலும் இயன்றதைத் தரும் மனம். கடைக்கு வருபவர்களிடம் பரிவோடும் பாசத்தோடும் பழகும் குணம். இக்கட்டான நேரங்களில் ஓடோடிச்சென்று செய்த உதவிகள். மனித மனங்கள் மதம்ää ஜாதிää இனம் பாராமல் அவருக்காக இரங்கின.

அவள் அழட்டும்



                                      அவள் அழட்டும்

     சிவசக்தி கல்யாண மண்டபத்தில் பெண்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. ஆண்கள் பகுதியில் முன்பக்கம் முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க பின்பகுதி அநேகமாக காலியாகவே இருந்தது. மணவாளன் வாசலில் நின்று நிதானமாக சிகரெட் இழுத்துவிட்டு ஆண்கள் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மட்டுமே அமர்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் தாராளமாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டான். திருமண வீட்டார் அவனை முன்வரிசைக்கு அழைத்த போதுää ‘பரவால்லங்க…’ என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். பின் வரிசையில் அமர்ந்திருப்பதில் அவனுக்குச் சௌகரியமிருந்தது. அவ்வப்போது யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் எழுந்து சிகரெட் பிடித்துவிட்டு வரலாம்.

     முன்னால் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்களும் அவனை அதிகம் பொருட்படுத்தவில்லை. பெண்கள் பகுதியில் யாரையோ குறிப்பிட்டு மெல்ல பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டது அவனது காதுகளையும் எட்டிக் கொண்டிருந்தது.
   
     “எந்த ஊர்ன்னு சொன்னே உடன்குடியா…”

     “சொந்த ஊரு படுக்கப்பத்தப்பா… கல்யாணம் ஆகியிருக்கிறது உடன்குடி”

     மணவாளன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.
   
     “உனக்கு அவங்களை எப்படித் தெரியும்…”
   
     “படுக்கப்பத்திலே அவங்க வீட்டுக்கு பக்கத்து வீடுதான் எங்க சித்தி வீடு.. ஸ்கூல் லீவிலே அடிக்கடி போவேன்… பார்த்து பத்து வருஷம் இருக்கும்… திடீர் கல்யாணம்… உடனே மெட்ராஸ் வந்திட்டாங்க…”

     “எதுக்காக திடீர்க் கல்யாணம்…”
   
     பதில் சொல்ல அடுத்தவன் சங்கடப்பட்டு பின்னால் பார்க்க மணவாளன் வேறெங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தான்.

     “சொல்லுடா…”

     “அந்த அக்கா ஒருத்தனை நம்பி மோசம் போயிருச்சு… அதான் அவசர அவசரமாக…”
   
     மணவாளனுக்கு வியர்க்கத் துவங்கியது.

     “ஏன் அந்தாளு வேண்டானுட்டானா…”

ஒத்திகை



                                          ஒத்திகை
கிழவர் சுப்பையா அண்ணாவி பெரும்குரலில் சத்தம் போட்டு பாடிக்கொண்டிருந்தார். தெருவில் நின்றிருந்த கழுதைகள் அவருக்கு எதிர்க்குரல் கொடுத்தன.
“வே… என்ன குஷி கிளம்பிடிச்சா…? காலறுவான் (பட்டப்பெயர்) நின்று கொண்டிருந்தார்.
“அடடே வாருமய்யா… பார்த்து எத்தனை நாளாச்சு… என்ன விஷேசமோ…?
“பையன்க இந்த வருஷம் ஊர்ல நாடகம் போடறான்களாம்… சகுனி வேஷத்துக்கு ஆள் தேடிக்கிட்டிருக்காங்க… உம்ம சிபாரிசு பண்ணியிருக்கேன்… எப்படி நடிக்கலாமில்லே…”
“நான் இல்லாம நாடகமா… என்ன இப்படி கேட்டுப்புட்டீரு… அந்தக் காலத்துல அரிச்சந்திரனா நான் வேஷம் போட்டு நிக்கும் போது பொம்பளப்பிள்ளைங்கயெல்லாம்…”
“பொம்பளப் பாட்டப் பாடியே விளங்காம போயிட்டீரு ஒய்… நீரு சாப்பாட்டுக் கவலை இல்லாத ஆளு… மகன் இரண்டு பேரும் மெட்ராஸில் இருந்து பணம் அனுப்புறானுக…. தினமும் ஒரு கலசம் கள்ளக் குடிச்சிப்புட்டு பிலாக்கணம் பாடிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருக்கீர். நாடகத்துக்கு வரும் போதாவது தெளிவாக வாரும்… நான் வாரேன்…”
     வாசக சாலையில் வயசுப் பையன்கள் குழுமியிருந்தனர். சுப்பையா அண்ணாவிக்கு பெரிய ஆசனம் போடப்பட்டிருந்தது. அவரது தோழர் காலறுவான் துண்டை விரித்து தரையில் அமர்ந்திருந்தார். நாடக ஆசிரியருக்கு நடு வயது இருக்க வேண்டும். அதிகச் சதைப்பற்றில்லாமல் காணப்பட்டார்.

வெந்தணலில்



                                    வெந்தணலில்

      புதிய நாட்டாமையாக இரத்தினவேலின் தேர்வு செபத்தையாபுரத்திற்கும்ää சுற்றுப்பட்டிகளுக்கும் பெருமையாக இருந்தது. நல்ல கருப்பு நிறத்தில் செதுக்கினாற்போல் முகவெட்டு. நிமிர்ந்த நடை. ஆறடியைக் கடந்த உயரம். ஏறிட்டுப் பார்க்க தயக்கத்தைத் தரும் சிங்க விழிகள்.
    சுற்றுவட்டாரங்களில் இரத்தினவேலுக்குத் தனி செல்வாக்கு இருந்தது. போராட்டக் குணமுள்ளவர். வளைந்து கொடுக்கும் பழக்கமில்லை. பாபநாசம் அணைத் தண்ணீர் முறைப்படி பாசனத்திற்குத் திறந்து விடப்படவில்லை என்றால்ää மாவட்ட ஆட்சியாளரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். அவர் பின்னால் திரளும் கூட்டத்தைப் பார்த்தே ஆட்சியாளர் அரண்டு போவதுண்டு. ‘அணை திறப்பதில் ஊருக்கு ஊர் என்ன எதிர்பார்க்கிறீர்கள்’ என்று கேட்டுமானத்தை வாங்கி விடுவார்.
    தூத்துக்குடியில் ஒருமுறை காவல்துறை ஆய்வாளர் வண்டிகளைச் சோதித்தபோதுää இரத்தினவேலின் ஜீப்பைக் கம்பு கொண்டு தட்டி… “என்ன பார்க்கறே… லைசென்ஸ் எடு…” என்று சொன்ன வார்த்தைக்கு அவர்மேல் மானநஷ்ட வழக்குப் போட்டார்.
    ‘மக்கள் வரிப்பணத்தில் வேலை பார்க்கும் ஒரு காவல் அதிகாரி மரியாதை இல்லாமல் எவ்வாறு பேசுவது? மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத் தெரியாதவர்களுக்கெல்லாம் எதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி அழ வேண்டும்’ என்று சீறி எழுந்துவிட்டார்.
நிலைமையின்  விபரீதத்தை புரிந்து கொண்ட ஆய்வாளர் தனிமையில் இரத்தினவேலின் காலைப் பிடிக்க வேண்டியது வந்தது. வழக்கும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஓடும் பஸ்ஸில் தெருப் பொறுக்கி ஒருவன்ää குடிபோதையில் இளம்பெண் ஒருத்தி முன் நின்று ஆடை களைந்தபோது… ஆண்கள் அத்தனை பேரும் பேடிகளாய்ச் செயலற்றிருக்க.. இரத்தினவேல் அவனது மறைவிடத்தில் ஓங்கி மிதித்துää ஓடும் பஸ்ஸில் இருந்து வெளியே தள்ளினார். அவன் உயிர் தப்பியதே பெரிய விஷயமாயிற்று.
தவறு செய்யும் அரசாங்க உயர் அதிகாரிகளானாலும்ää சமூகக் குற்றவாளிகளான ரவுடிகளானாலும்ää எவரானாலும் அவர் ஓதுங்கியது கிடையாது. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அது ஓன்றுதான் அச்சம் தருவதாக இருந்தது.
ஓவ்வொரு விடியலும் இரத்தின வேலுக்குப் பரபரப்பானவை. அன்றும் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தைக் கவனித்துவிட்டு பண்ணைக்கு வந்தபோது செல்போன் அலறியது.
“என்ன விஷயம்…?”
“முக்கியமான பிரச்சினை… உடனே புறப்பட்டு வாங்க…”
அரைமணியில் செபத்தையாபுரம் வந்தார். திடலில் ஊரே திரண்டிருந்தது.
“நாட்டாமை வந்தாச்சு… வழியை விடுங்க…”
கூட்டத்தைக் கண்களால் அளந்த படியே மேடைக்கு வந்தார். மேடைக்கு எதிரில் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். கையை உயர்த்தியதும் கூட்டம் அடங்கியது.
“என்ன வழக்கு…?”
ஒருவர் பதில் சொன்னார்.
“இதோ நிக்கறாளே தாமரை… இவளும் இந்தப் பால்பாண்டியும் தவறா நடந்திருக்காங்க… கையும் களவுமா பிடிச்சாச்சு…”
இரத்தினவேலின் கண்கள் அந்தப் பெண்ணை ஏறிட்டன. அழுதுää பயந்துää வெட்கத்தாலும் அவமானத்தாலும் குன்றிப்போய் நின்று கொண்டிருந்தாள். வயது கண்டிப்பாக முப்பது இருக்கும். மெலிந்த தோற்றம். திருமணமாகாத முதிர்கன்னி. பால்பாண்டியின் மேல் பார்வை திரும்பியது. நாள் கூலி. திருமணமாகாதவன்தான்.
“வயசுப் பொண்ணுங்க மானத்தோட வாழ வேண்டாமா..? என்ன தைரியத்துலடா இவளை நீ தொட்டே..?”
பால்பாண்டி வியர்த்துப்போய் நின்று கொண்டிருந்தான். கிடைக்க இருக்கும் தண்டனையை நினைத்து மனது அழுதது.
ஊரில் இதுபோன்ற அத்து மீறல்களுக்குத் தண்டனை விநோதமானது. ஊர்வலமாக அவர்கள் தெருக்களில் அழைத்து வரப்படுவார்கள். வீடு வீடாக வரும்போதுää சாணிக்கரைசலையும் அழுகிய முட்டைகளையும் அவர்கள் மீது வீசி எறிவார்கள். இதுபோன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட ஆண்கள் ஊரைவிட்டே ஓடியிருக்கிறார்கள். பெண்கள் தூத்துக்கயிறை முத்தமிட்டிருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும் என்று நாட்டாமைகளால் கடைப்பிடிக்கப்பட்ட இரும்புச் சட்டம் அது.
“இவளோட அப்பா யாரு…?
“இதோ நிக்கறாரு செல்வராசு…”
முன்னே வந்து நின்ற செல்வராசுவை இரத்தினவேல் ஏறிட்டார். அவரது கண்கள் சிவந்தன.
“இவனா?
சம்பாதிக்கும் பணம் அத்தனையையும் கூத்தியா வீடுகளில் செலவு செய்பவன். வீட்டில் பெண் பிள்ளை திருமண வயதைக் கடந்து கொண்டிருக்கிறதே என்ற உணர்வில்லாமல்ää அவளுக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற அக்கறையில்லாமல் நாட்களைக் கடத்துபவன்…
தாமரை வயல் வேலைகளுக்குச் செல்பவள்தான். அவளது சம்பளத்தைச் சேமித்து வைத்திருந்தால்கூட அவளை நல்லபடியாகக் கடத்தியிருக்க முடியும். அவளது திருமணத்தைப் பற்றி யாராவது கேட்டால் ‘ஜாதகம் பார்த்தேன். நேரம் வரவில்லை’ என்று கூசாமல் சொல்லுவான்.
“ஜாதகம் பார்க்கிறேன்; ஜாதகம் பார்க்கிறேன் என்று பெண் பிள்ளைகளை வெந்தணலில் வேகவைக்கிறீர்களேடா.. ஈன முண்டங்களா…”
நாட்டாமை பொங்கி எழுந்தார்ää
“இன்னைக்குத் தண்டனை செல்வராசுக்குத்தான்… இவனைத் தெருத் தெருவா இழுத்திட்டுப் போங்க…
பொம்பளைப் பிள்ளைய காலா காலத்துல கடத்தறதுக்கு எந்த முயற்சியும் செய்யாத வெறும் பய…!  நம்ம ஊரு பொம்பளைப் பிள்ளைங்க ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி இருக்குதுங்க… பெரிய பணக்காரப் பயலுகளா வேண்டாம்… அன்னன்னைக்கிப் பாடுபட்டு கௌரவமா வாழ்க்கை நடத்துற எத்தனையோ பையன்க இருக்காங்க… அப்படி ஒரு பையனைப் பார்த்து இந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் முடிக்க நினைக்காத நீ என்னடா தகப்பன்… அயோக்கிய நாயே!
டேய் பால்பாண்டி… இந்தப் பொண்ணுக்காக நான் உன்னை மன்னிக்கிறேன். அம்மன் கோவில்லவச்சி நீ இவ கழுத்துல தாலிகட்டனும். இவகிட்டே நகையோää பணமோ எதுவும் கேட்கக்கூடாது. குடும்பம் நடத்துறதுல ஏதாவது பிரச்சினை வந்ததுன்னா உன்னை விடமாட்டோம்..!”
தாமரைக்கு திரௌபதியின் மானத்தைக் காத்த கண்ணனின் நினைவு வந்தது. கதறி அழுதபடி நாட்டாமையின் காலில் விழுந்தாள்.
“நல்லா இரும்மா..”
துண்டை உதறித் தோளில் போட்டபடி நாட்டாமை படி இறங்க திருத்தி எழுதப்பட்ட புதிய தீர்ப்பை கூட்;டம் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டது.


இதயம் பேசுகிறது
25.05.2000

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வேதங்களும் தத்துவங்களும்


                                     வேதங்களும் தத்துவங்களும்

            செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் மலைப்பாதை. டெம்போ டிராவலர் நல்ல பொறுத்தம். வலுவான எஞ்சின். உயரமான காற்றோட்டமான இருக்கைகள். ஸ்டீரியோவில் இருந்து புறப்பட்ட புல்லாங் குழலோசைää மொத்தம் பத்து பேர். அமிர்தபுரி நோக்கி ஒரு புண்ணிய யாத்;திரை. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துஅடர்ந்த மரங்களை10த்துச் சிரிக்கும் செடிகளைபள்ளத்தாக்கில் பாய்ந்து செல்லும் நீரோடைகளைமலையின் சரிவுகளில் வசிக்கும் மக்களை.. வீசும் குளிர்காற்றைமலையைத் தொட்டாற்போல் தவழ்ந்த மேகங்களைவியந்து பார்த்தபடி.. ஏதோ ஒரு புதிய உலகத்திற்குள் நுழைகிறோம் என்ற ஆனந்தத்தை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் சக்கரவர்த்தி.
            மலைப்பாதை வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும் செடிகளும்தான். உயரத்தில் ஒரு சிற்றூர். பத்துப் பதினைந்து வீடுகள். நான்கைந்து தேநீhக்; கடைகள். தேன் குரலில் மலையாளம். இளம் பெண்கள் சிற்றோடைகளில் குளித்துவிட்டு தலைமுடியை மயில் தோகை போல் விரித்தபடி சென்றார்கள். தேநீர்க்கடைகளில் வள்ளிக் கிழங்கை தோலுரித்துக் கொண்டிருந்தார்கள். கடைகளில் வள்ளிக்கிழங்கு நல்ல சுவையான உணவு.
            அரைமணி நேர ஓய்வுக்குப் பிறகு வண்டி உறுமி கிளம்பியது. அமிர்தபுரிக்கு இது முதற்பயணம். அங்குதான் அம்மா இருக்கிறார்கள். மாதா அமிர்தானந்தமயி என்ற அன்னையைத் தரிசித்து வரவேண்டும் என்பது அவனது நீண்டநாள் பிரார்த்தனை.
            அம்மாவின் எளிமையும்.. சேவையும்கனிவும்.. சக்கரவர்த்தியை அவர்பால் ஈர்த்தன. அம்மா சிறு பெண்ணாக இருந்தபோதே மணிக்கணக்கில் தியானத்தில் ஈடுபட்டு இறைவனைத் தேடியவர். தனக்கென்று வாழாத வாழ்க்கை அவருடையது. துன்பப்படுபவர்களுக்கு ஆறுதலாய் இருப்பவர்.
            இந்த உலகம் முழுவதும் அவருடைய பிள்ளைகளே. இந்தப் பெண்மணிக்குள் ஒளிந்திருப்பது யார்அந்தமாயக் கிருஷ்ணணாஅல்லது அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற மாயா சக்தியாஅமெரிக்காவில் தேவாலயங்களில் அம்மாவிற்கு கொடுக்கப்படும் வரவேற்புகிறிஸ்து பிறந்த நாளில் அம்மா அனைவருக்கும் விடுக்கும் நற்செய்திகள்.. நபிகளைப் புகழ்ந்து அம்மா பேசும் வார்த்தைகள்அம்மா நீ யார்…?
            கொல்லம் வந்து கருநாகப்பள்ளியும் வந்தது. அங்கிருந்து ஒரு கிளைச்சாலை. வள்ளிக்காவு என்ற கடற்கரைக் கிராமத்தில் அமிர்தபுரி எழுந்திருந்தது. அழகான கட்டிடங்கள்பிரமாண்டமான பிரார்த்தனைக்கூடம்பல்வேறு நாட்டவர்களும் பேதமின்றி உலவும் காட்சிகள்அருமையான கடற்கரை.. அகன்ற உப்பங்களிகள்.. ஆஸ்ரமத்தில் பெரிய கோடீஸ்வரர்கள் எச்சில் தட்டைக் கழுவிக் கொண்டும்.. தரையைப் பெருக்கிக் கொண்டும்கழிவறைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

மீண்டும் ஒரு பயணம் வரும்…


மீண்டும் ஒரு பயணம் வரும்

            திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்ட விஜயராகவனுக்கு உயரமான கோவில் கோபுரம் தெரிந்தது. முருகாபயபக்தியோடு கன்னங்களில் போட்டுக் கொண்டான். லெதர்பையை தோளில் போட்டுக் கொண்டு சூட்கேஸை கையில் தூக்கிக் கொண்டான்.
            “இரண்டு ருபா கொடுங்க சார் நான் தூக்கிட்டு வர்ரேன்…”
            அழுக்கடைந்த உடையில் கூலிக்கார பையன்.
            “சூட்கேஸை மட்டும் தூக்கிக்கோ…” நடந்தார்கள். டாக்ஸி ஸ்டாண்டில் பழைய மாடல் அம்பாஸிடர்கள் நிறைய இருந்தன.
            “வாங்கசார்கோவிலுக்குதானே போகணும்?”
            “இல்லேகானத்துக்குப் போகணும்.. எவ்வளவு வேணும்?”
            “நூறு ருபாய் ஆகும் சார்
            காரில் ஏறிக்கொண்டான். பெட்டியைத் தூக்கி வந்த பையனிடம் ஜந்து ருபாயை நீட்டினான்.
            “சில்லரை இல்லே சார்…”
            “வச்சிக்கோ
            கார் நகர்ந்தது. சிறுவனின் கண்களில் பிரமிப்பு. கார் சென்ற பாதை நெடுகிலும் பனை மரங்களும் உடை மரங்களும் தான். அங்கங்கே செழுமையான தென்னந் தோப்புகள். காயாமொழியிலிருந்து வடக்கே வரும்போது சிகப்புக்கலரில் மணல் மேடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எழுந்தும்ää தாழ்ந்தும் மணல் குவியல்கள் அற்புதமாய் இருந்தன. அந்தச் செம்மண் தேரியிலும் பசுமையாய் தழைத்து நின்றன கொல்லாமரங்கள். காற்று வீசும் போது பொடிமணல் காற்றோடு கலந்து மேனியை வருடியது. கானம் பள்ளத்தில் இருந்தது. நெருங்கவும் டிரைவர் கேட்டான்.
            “எந்த தெரு சார்…!
            ‘விசாரிக்கணும்நாராயணசாமி கோவில் பக்கத்துலதான் வீடு…”
            டிரைவர் கும்பலாய் ஓடிவந்த சிறுவர்களைக் கோட்டான்.
            “நாராயணசாமி கோவில் எங்கல இருக்கு?
            “நேரா போட்டு…”

வியாழன், 19 ஜூலை, 2012

தாய்மைக்க


                                                                 தாய்மைக்காக

வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்தது. பேய்க்காற்று வேறு. உயரத்தில் செம்மண் புழுதி அவ்வப்போது கிளம்பிக் கொண்டிருந்தது. கிழவி மரகதம் செருவை நிழலில் அமர்ந்து தட்டி முணைந்து கொண்டிருந்தாள். மெலிந்த சுருங்கிய தேகம். இடுங்கிய கண்கள். உடல் முழுக்க நரம்புக் கோடுகள். அடிக்கடி இருமல். தலைää பரட்டையாக இருந்தது.

“கிணிங்…. கிணிங்”…

சைக்கிள் மணியின் சத்தம். கரட்டு கரட்டு என்று உயிரை விடத் தயாராக இருந்த அந்த பழைய சைக்கிளை பிரயத் தனப்பட்டு மிதித்துக் கொண்டிருந்த போஸ்ட்மேன்ää கிழவி இருந்த குடிசையின் பக்கம் இறங்கிக் கொண்டான்.

“மணியார்டர் வந்திருக்கும்மா… மருமகளைக் கூப்பிடு…”

பம்பாயில் இருந்து மகன் தங்கராசு பணம் அனுப்பியிருக்க வேண்டும்.

“எவ்வளவுய்யா அனுப்பியிருக்கான் என் ராசா…?”

“ஏ கிழவிää சும்மா இருக்கமாட்டே நீ.. கொள்ளிக்கட்டையை வச்சி வாயில தேச்சுப் புடுவேன்..”

பணத்தை வாங்கி மடியில் முடிந்து கொண்ட மருமகள் சரோசா கிழவியிடம் மீண்டும் சீறினாள்.

“கிழட்டு முண்டை… இன்னும் நாலு தட்டி கூட முணைஞ்ச பாடில்ல… அதுக்குள்ளே அக்கம் பக்கத்துல என்ன பேச்சு… பணம் எவ்வளவுண்ணு தெரிஞ்சி என்ன பண்ணப் போறே..! பாடை கட்டறதுக்கு பணம் என்கிட்டே இருக்கு… பயப்படாம வேலையப் பாரு… மதியத்துக்குள்ளே இந்த ஓலையையெல்லாம் முணைஞ்சிருக்கணும்… அப்பத்தான் கஞ்சி ஊத்துவேன்…”

கிழவியைப் பார்க்க போஸ்ட்மேனுக்கு பரிதாபமாக இருந்தது. அவள் முகம் சிறுத்துப் போனதையும் அந்த தளர்ந்த கரங்கள் பதட்டத்தோடு ஓலைகளை வளைத்து வளைத்து தட்டியைப் பின்ன விரைந்ததையும் ஏறிட்டுவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

அதிகாலையில் இருந்து மதியம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளை வரை சளைக்காமல் தட்டி முணைந்துகொண்டுதான் இருந்தாள் மரகதம். காலை எட்டு மணிக்கு ஒரு தம்ளரில் மண்டிக் காப்பியை மருமகள் தந்தாள். இனிமேல் மதியம் கொஞ்சம் கஞ்சி தருவாள். பசித்து இடுங்கிய வயிரை ஒளி மங்கிய கண்களால் பார்த்துக் கொண்டு கைவிரல்கள் ஓலைகளை இழுத்துக் கொண்டிருந்தன. இன்றைக்கு மீன் வாங்கியிருப்பாள் போலும். மீன் குளம்பின் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. பேரப் பிள்ளைகள் முருங்கைமர நிழலில் புழுதியில் புரண்டு கொண்டிருந்தார்கள்.
கிழவி அலுத்துக் கொண்டாள்.