வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வேதங்களும் தத்துவங்களும்


                                     வேதங்களும் தத்துவங்களும்

            செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் மலைப்பாதை. டெம்போ டிராவலர் நல்ல பொறுத்தம். வலுவான எஞ்சின். உயரமான காற்றோட்டமான இருக்கைகள். ஸ்டீரியோவில் இருந்து புறப்பட்ட புல்லாங் குழலோசைää மொத்தம் பத்து பேர். அமிர்தபுரி நோக்கி ஒரு புண்ணிய யாத்;திரை. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துஅடர்ந்த மரங்களை10த்துச் சிரிக்கும் செடிகளைபள்ளத்தாக்கில் பாய்ந்து செல்லும் நீரோடைகளைமலையின் சரிவுகளில் வசிக்கும் மக்களை.. வீசும் குளிர்காற்றைமலையைத் தொட்டாற்போல் தவழ்ந்த மேகங்களைவியந்து பார்த்தபடி.. ஏதோ ஒரு புதிய உலகத்திற்குள் நுழைகிறோம் என்ற ஆனந்தத்தை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் சக்கரவர்த்தி.
            மலைப்பாதை வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும் செடிகளும்தான். உயரத்தில் ஒரு சிற்றூர். பத்துப் பதினைந்து வீடுகள். நான்கைந்து தேநீhக்; கடைகள். தேன் குரலில் மலையாளம். இளம் பெண்கள் சிற்றோடைகளில் குளித்துவிட்டு தலைமுடியை மயில் தோகை போல் விரித்தபடி சென்றார்கள். தேநீர்க்கடைகளில் வள்ளிக் கிழங்கை தோலுரித்துக் கொண்டிருந்தார்கள். கடைகளில் வள்ளிக்கிழங்கு நல்ல சுவையான உணவு.
            அரைமணி நேர ஓய்வுக்குப் பிறகு வண்டி உறுமி கிளம்பியது. அமிர்தபுரிக்கு இது முதற்பயணம். அங்குதான் அம்மா இருக்கிறார்கள். மாதா அமிர்தானந்தமயி என்ற அன்னையைத் தரிசித்து வரவேண்டும் என்பது அவனது நீண்டநாள் பிரார்த்தனை.
            அம்மாவின் எளிமையும்.. சேவையும்கனிவும்.. சக்கரவர்த்தியை அவர்பால் ஈர்த்தன. அம்மா சிறு பெண்ணாக இருந்தபோதே மணிக்கணக்கில் தியானத்தில் ஈடுபட்டு இறைவனைத் தேடியவர். தனக்கென்று வாழாத வாழ்க்கை அவருடையது. துன்பப்படுபவர்களுக்கு ஆறுதலாய் இருப்பவர்.
            இந்த உலகம் முழுவதும் அவருடைய பிள்ளைகளே. இந்தப் பெண்மணிக்குள் ஒளிந்திருப்பது யார்அந்தமாயக் கிருஷ்ணணாஅல்லது அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற மாயா சக்தியாஅமெரிக்காவில் தேவாலயங்களில் அம்மாவிற்கு கொடுக்கப்படும் வரவேற்புகிறிஸ்து பிறந்த நாளில் அம்மா அனைவருக்கும் விடுக்கும் நற்செய்திகள்.. நபிகளைப் புகழ்ந்து அம்மா பேசும் வார்த்தைகள்அம்மா நீ யார்…?
            கொல்லம் வந்து கருநாகப்பள்ளியும் வந்தது. அங்கிருந்து ஒரு கிளைச்சாலை. வள்ளிக்காவு என்ற கடற்கரைக் கிராமத்தில் அமிர்தபுரி எழுந்திருந்தது. அழகான கட்டிடங்கள்பிரமாண்டமான பிரார்த்தனைக்கூடம்பல்வேறு நாட்டவர்களும் பேதமின்றி உலவும் காட்சிகள்அருமையான கடற்கரை.. அகன்ற உப்பங்களிகள்.. ஆஸ்ரமத்தில் பெரிய கோடீஸ்வரர்கள் எச்சில் தட்டைக் கழுவிக் கொண்டும்.. தரையைப் பெருக்கிக் கொண்டும்கழிவறைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள்.